Archive for C N Annathurai
வேலூர் வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர் திரு G.விஸ்வநாதன்
2-11-2008 அன்று வேலூர் அண்ணா கலை அரங்கத்தில் வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில்
வேலூர் வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர் திரு G.விஸ்வநாதன் அவர்கள் ஆற்றிய துவக்க உரை.
SPEECHES GATHERED BY
================
A. MURALIDHARAN
Personal Escort to Chancellor
(File Photo showing Thiru G.Viswanathan with Arignar Anna)
செவ்வாழை :: அறிஞர் அண்ணா :: ஒலி வடிவில்
இந்த தளத்தை பற்றிய அறிமுகத்தையும், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் நமக்கு மிகவும் பரிச்சியமான (கல்லுரிகளில் முதாலாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் பலரும் படித்திருக்கிறோம்..) செவ்வாழை சிறுகதையை நமக்காக ஒலி வடிவில் வழங்குகிறார் அமெரிகவிலிருந்து திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்கள். அவருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
செங்கோடன்,அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தை கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்து விட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டு இருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான் , தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான்.அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாலையை அவன் வளர்த்து வந்தான்.
கொக்கரக்கோ :: அறிஞர் அண்ணா :: ஒலி வடிவில்
ஒரு நாள் மாலை கடற்கரை முன்பு கண்மூடி மௌனியாக கொண்டிருந்தேன் . கண் மூடுவதும், மௌனியாவதும்,கனவு காண்பதும் சகஜம் தானே! .
“வைஸ்ராயை பார்த்தாயா, இல்லையா? “என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டு தட்டவே , கண் விழித்து திரும்பிப் பார்த்தேன்.பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான்.
பலாபலன் :: அறிஞர் அண்ணா
“சூரியனுடைய பார்வை, மட்டமாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்த காய்ச்சல் குறையும்.”
“நெருப்பு வீசுதுங்க ; அவர் பக்கத்திலே உட்கார்ந்தாலே.”
“வீசும் வீசும்;…”
இரும்பு முள்வேலி :: ஒலி வடிவில் :: பகுதி 1
தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். ‘மனிதத் தன்மை’யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மை மிக்க கருத்தோவியம்…..
வெளியான ஆண்டு - 1966
அறிஞர் அண்ணா நுற்றாண்டு விழா
அறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகளை ஒலி வடிவில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணா நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் எங்களுடைய இந்த முயற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.
சொல்லாதது :: ஒலி வடிவில்
அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு…..
ரங்கோன் ராதா :: ஒலி வடிவில் :: பகுதி 1
…… “அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்” என்று நான் கேட்டேன். “கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி” என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். “போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்” என்று நான் வாக்களித்தேன்……
வெளியான ஆண்டு - 1943

Standard Podcast [11:04m]: 
2-11-2008 அன்று வேலூர் அண்ணா கலை அரங்கத்தில் வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில்