செவ்வாழை :: அறிஞர் அண்ணா :: ஒலி வடிவில்
இந்த தளத்தை பற்றிய அறிமுகத்தையும், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் நமக்கு மிகவும் பரிச்சியமான (கல்லுரிகளில் முதாலாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் பலரும் படித்திருக்கிறோம்..) செவ்வாழை சிறுகதையை நமக்காக ஒலி வடிவில் வழங்குகிறார் அமெரிகவிலிருந்து திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்கள். அவருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
செங்கோடன்,அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தை கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்து விட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டு இருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான் , தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான்.அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாலையை அவன் வளர்த்து வந்தான்.

Sevvalai [20:06m]: